Sunday, October 23, 2005

இது ஒரு நல்ல பதிவு

'நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி
இந்த நாடே இருக்குது தம்பி'

"எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான்
மண்ணில் பிறக்கையிலே"

"நல்ல நல்ல நிலம் பார்த்து
நாமும் விதை விதைக்கணும்
நாட்டு மக்கள் மனங்களிலே
நாணயத்தை விதைக்கணும்.."

"நல்ல பேரை வாங்க
வேண்டும் பிள்ளைகளே
நம்நாடு என்னும் தோட்டத்திலே
நாளை மலரும் முல்லைகளே"

"நல்லவன் எனக்கு நானே நல்லவன்
சொல்லிலும் செயலிலும் (ந)வல்லவன்"

"நல்ல மனம் வாழ்க
நாடு போற்ற வாழ்க"

இந்தப் பதிவைப் படிப்போர்க்கு முதன் முதலாக நாலு நல்ல கருத்துக்களைச் சொல்லியிருப்பதாகக் கருதுகிறேன். இப்படிப் போடப்படும் பதிவுகள் நிச்சயம் எந்தக் கத்திரிக்கும் தப்பும் என்பது இந்தத் தெருத்தொண்டனின் நம்பிக்கை.

பக்கத்து வீட்டுப் படிச்ச தம்பியிடம் போய் மகாத்மா காந்தி எழுதிய "சத்திய சோதனை" , வள்ளலார் அருட்பா போன்ற புத்தகங்களை வாங்கிப் படிக்க வேண்டும். நான் போன போது தம்பி இருந்துச்சு வீட்டுல.

நான் எல்லோருக்கும் நல்லவனா இருக்கறதுன்னு முடிவெடுத்து என் பதிவுல ரெண்டு அல்லது மூணு வரிகளுக்கு ஒரு தடவை "நல்ல" என்ற சொல் வரும்படி பார்த்துக் கொண்டதை சொன்னேன்.

சத்திய சோதனை எல்லாம் படிச்சு எல்லோரும் நல்லவரே என்ற நம்பிக்கையில் எல்லோருக்கும் நல்லவனாக நடுநிலையோடு இருக்க ஆசைப்படுவதையும் சொன்னேன்.

தம்பி வழக்கமா நான் சந்தேகம் கேட்டா பதில் சொல்லும். இந்த தடவை அது என்னை பதில் கேள்வி கேட்டுச்சு.

"நடுநிலை என்றால் என்ன?"

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

2 Comments:

At 9:39 AM, Blogger தாணு said...

நாராயணனின் பாடல் லயிப்பு உங்களையும் தொற்றிக் கொண்டதா?

 
At 7:18 AM, Blogger தெருத்தொண்டன் said...

என்றோ கேட்டவை தான்.

 

Post a Comment

<< Home